Thursday, November 25, 2010
Kamal haasan's வெண்பா
கிரஹணாதி கிரஹணங்ட்கு அப்பாலுமே ஒரு அசஹாய சக்தி உண்டாம்.
ஆளுக்கு ஆள் ஒரு மொழிபுறை கிரிக்கியும் யாருக்கும் விளங்கததாம்.
அதை பயற்ந்து அதை உணர்ந்து அதை துதிப்பதுவன்றி பெரிதேதும் வழி இல்லையாம்.
நாம் செய்த வினைஎல்லாம் முன் செய்ததென்பது விதி ஒன்று செயவிததாம்.
அதை வெல்ல முயல்வோரை சதி கூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்.
குருடாக, செவிடாக, மலடாக, முடமாக, கரு சேர்க்கும் திருமூலமாம்.
குஷ்ட குஹ்யம் புற்று சூலை மூலம் என்ற க்ரூரங்கள் அதன் சித்தமாம்.
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புது ஜென்மம் தந்தருளுமாம்.
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதேதும் வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம்.
ஏழைக்கு வரும் துயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்.
நேர்கின்ற நேர்வேல்லாம் நேர்விக்கும் நாயகம் போர் கூட அதனின் செயலாம்.
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னற்கு தரணிதந்தது காக்குமாம்.
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர்தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்.
அசுரரை பிளந்த போல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்தும்,
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்,
பிள்ளையின் கறியுண்டு நம்பினாற்கு அருளிடும் பரிவான பரப்ரம்மமே!!!
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு சக்தியை
மற்றவர் வயி பயம் கொண்டு நீ போற்றிடு, அற்றதை உண்டென்று கொள்!
ஆகம குளமூழ்கி, மும்மலம் கழி, அறிவை ஆத்திக சலவையும் செய்!
கொட்டடித்து போற்று, மணியடித்து போற்று, கற்பூர அறத்தியை!
தையடா ஊசியிர் தந்ததை தைத்தப்பின் தக்கதை தய்யாதிறு
உய்திடும் மெய் வழி உதாசீநிதப்பின் நெய்வதே நன்றனின் நை!
உலகநாயகன்
கமலஹாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment