வேகமாக சுழலும் உலகில் சின்னஞ்சிறிய உலகங்கள் படைத்தது அதில் சுகதுக்கங்களை ஆண்டுகொண்டு அதிலேயே மாண்டுகொண்டிருக்கும் கோடானகோடி சிற்றரசர்களில் சிலர் மட்டுமே உலகை ஆள பிறக்கிறார்கள். கண்களில் கனவையும், நெஞ்சினில் தாகமும் கொண்டு ஒவ்வொரு நாளும் தன் நம்பிக்கை வளர்த்து லட்சியம் வெல்கிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் செல் போனை விட கை கொடுக்கும் விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. கண்களில் புலப்படாத சக்திக்கு மதிப்பும், மவுசும் அதிகமாம். நம் உலகை படைத்த சக்தியும் இதில் ஒன்று. கடவுள் என்ற ஒரு விஷயம் எல்லோராலும் பேசப்படுகிறது.
தினம் தோரும் துதித்து அருள் பெறுவதாக ஒரு சாரார், இல்லை இல்லை என்று பஹிரங்கப்படுத்தும் மற்றொரு சாரார். இல்லை இல்லை என்று சொல்லிச்சொல்லி கடவுளை மறக்காமல் பேசிகிறார். ஆமாம் ஆமாம் என்று பேசி துதிக்கவும் மறக்கிறார்...
பலவகை கடவுள்கள் நம்மை கவர்ந்து அவரவர்களின் வழியில் நம்மை ஈர்த்து வாழ்கை பாதையை அமைக்கிறார்கள். நம் வாழ்கை நெறிகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் எல்லாமே ஒரே கால தேச வர்த்தமானத்தை சார்ந்தே இருந்தாலும் வெவ்வேறாக மாறுபட்டே காணப்படுகிறது.
கடவுள் மனிதனை படைதான? அல்ல மனிதன் கடவுளை படைத்தானா??
கடவுள் படைத்த உலகில் பாரபட்சம் நிலவக்கூடாது. உண்மை அது அல்ல என்றாலும், மனிதனால் இவ்வளவு அற்புதங்களை இயற்கையில் இயக்க முடியாது. இயற்கை தான் கடவுளோ?
அவரவர் சொவ்ஹர்யங்களுக்கு ஏதுவாக மனிதன் கடவுளைபடைத்திருக்க்கக்கூடும். மாடு மேய்த்த கண்ணனும் ஆடு மேய்த்த ஏசுவும் பலரின் இஷ்ட தெய்வங்கள்.
மனித உருவில் கடவுளை ஏன் உணர வேண்டும்? இந்த சித்தாந்தம் சொல்லும்உட்கருத்து என் வரையில் ஒன்று தான்:
"மனிதனே கடவுள்"
நாம் அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்வதை விட யாசகம் கேட்பதே அதிகம். உண்மையாய் இறையை போற்றி, அந்த எல்லாம் வல்லனுக்கு நன்றி கூறும்ஜீவாத்மாக்கள் துர்லபமே.
" மனிதனுக்கு கடவுளின் தேவை என்ன?"
துக்கங்களை பகிர்ந்துகொள்ள, கொஞ்சி விளையாட, உரிமையுடன்கோபித்துக்கொள்ள, துன்பம் வரும் வேளையில் நம்மையேதிடப்படுத்திக்கொள்ள தேவையான ஒரு "துணை"
தாயையும், நண்பனையும், மனைவியையும், குழந்தையையும் நாம் தெய்வத்தை ஒத்த ஸ்தானத்தில் வைத்ததின் அர்த்தம் இது தானோ??
யார் அந்த பரப்ரம்மம்?
ஆண்ட சராசரம் அந்த பஞ்ச பூதங்களின் அமைப்பு. நம்மை சுற்றி வியாபித்திருப்பது சக்தியின் உருவம். அதே சக்தி எல்லா மனதிற்குள்ளும் பற்பல கற்பனைகளாக ஊறிக்கிடக்கிறது. அன்பின் அடையாளமாக உலகில் பல பிரம்மாண்டமான மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.
திருமறையில் ஒரு பிரபல குறள்...
"அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு"
அன்பினால் ஒரு உயிர் பலர்க்கு சொந்தமாகிறது... சற்றே ஆழமாக பார்த்தல், அன்பு தான் உலகை ஆளும் சக்தி.
அன்பே கடவுள்; அன்பே உலகை படைத்த சக்தி;
அன்பே மனிதன் தேடும் கடவுள்!
அன்பே மனிதனை மனிதனாக்கியது.
அன்பே தான் அந்த பரப்ரம்மம்!!!
அன்றாட வாழ்க்கையில் செல் போனை விட கை கொடுக்கும் விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. கண்களில் புலப்படாத சக்திக்கு மதிப்பும், மவுசும் அதிகமாம். நம் உலகை படைத்த சக்தியும் இதில் ஒன்று. கடவுள் என்ற ஒரு விஷயம் எல்லோராலும் பேசப்படுகிறது.
தினம் தோரும் துதித்து அருள் பெறுவதாக ஒரு சாரார், இல்லை இல்லை என்று பஹிரங்கப்படுத்தும் மற்றொரு சாரார். இல்லை இல்லை என்று சொல்லிச்சொல்லி கடவுளை மறக்காமல் பேசிகிறார். ஆமாம் ஆமாம் என்று பேசி துதிக்கவும் மறக்கிறார்...
பலவகை கடவுள்கள் நம்மை கவர்ந்து அவரவர்களின் வழியில் நம்மை ஈர்த்து வாழ்கை பாதையை அமைக்கிறார்கள். நம் வாழ்கை நெறிகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் எல்லாமே ஒரே கால தேச வர்த்தமானத்தை சார்ந்தே இருந்தாலும் வெவ்வேறாக மாறுபட்டே காணப்படுகிறது.
கடவுள் மனிதனை படைதான? அல்ல மனிதன் கடவுளை படைத்தானா??
கடவுள் படைத்த உலகில் பாரபட்சம் நிலவக்கூடாது. உண்மை அது அல்ல என்றாலும், மனிதனால் இவ்வளவு அற்புதங்களை இயற்கையில் இயக்க முடியாது. இயற்கை தான் கடவுளோ?
அவரவர் சொவ்ஹர்யங்களுக்கு ஏதுவாக மனிதன் கடவுளைபடைத்திருக்க்கக்கூடும். மாடு மேய்த்த கண்ணனும் ஆடு மேய்த்த ஏசுவும் பலரின் இஷ்ட தெய்வங்கள்.
மனித உருவில் கடவுளை ஏன் உணர வேண்டும்? இந்த சித்தாந்தம் சொல்லும்உட்கருத்து என் வரையில் ஒன்று தான்:
"மனிதனே கடவுள்"
நாம் அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்வதை விட யாசகம் கேட்பதே அதிகம். உண்மையாய் இறையை போற்றி, அந்த எல்லாம் வல்லனுக்கு நன்றி கூறும்ஜீவாத்மாக்கள் துர்லபமே.
" மனிதனுக்கு கடவுளின் தேவை என்ன?"
துக்கங்களை பகிர்ந்துகொள்ள, கொஞ்சி விளையாட, உரிமையுடன்கோபித்துக்கொள்ள, துன்பம் வரும் வேளையில் நம்மையேதிடப்படுத்திக்கொள்ள தேவையான ஒரு "துணை"
தாயையும், நண்பனையும், மனைவியையும், குழந்தையையும் நாம் தெய்வத்தை ஒத்த ஸ்தானத்தில் வைத்ததின் அர்த்தம் இது தானோ??
யார் அந்த பரப்ரம்மம்?
ஆண்ட சராசரம் அந்த பஞ்ச பூதங்களின் அமைப்பு. நம்மை சுற்றி வியாபித்திருப்பது சக்தியின் உருவம். அதே சக்தி எல்லா மனதிற்குள்ளும் பற்பல கற்பனைகளாக ஊறிக்கிடக்கிறது. அன்பின் அடையாளமாக உலகில் பல பிரம்மாண்டமான மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.
திருமறையில் ஒரு பிரபல குறள்...
"அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு"
அன்பினால் ஒரு உயிர் பலர்க்கு சொந்தமாகிறது... சற்றே ஆழமாக பார்த்தல், அன்பு தான் உலகை ஆளும் சக்தி.
அன்பே கடவுள்; அன்பே உலகை படைத்த சக்தி;
அன்பே மனிதன் தேடும் கடவுள்!
அன்பே மனிதனை மனிதனாக்கியது.
அன்பே தான் அந்த பரப்ரம்மம்!!!
No comments:
Post a Comment